Friends of SPB Tamilnadu
ASIN: B08KL6SQLB
Publisher: unknown
Pages: 112
எஸ்பிபி அவர்களை தன் நண்பன் என்று உரிமை கொண்டாட குழந்தை முதல் வயோதிகர் வரை இந்த மண்ணில் பிறந்த அத்தனை பேருக்கும் உரிமையிருக்கிறது. அத்தனை பேரின் வாழ்வை மனதை உணர்வை அவர் தொட்டிருக்கிறார் பழகியிருக்கிறார் கூடவே வாழ்ந்திருக்கிறார்.. இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கப் போகிறார். அவருக்காக இன்று கசிந்துருகும் நம் அனைவரின் காலத்திற்கு பிறகும் அவர் வாழப் போகிறார் என்பதே உண்மை. இந்த மண்ணில் ஆக்சிஜன் தீர்ந்து போய் மனித இனம் அழிந்து போகும் காலம் வந்தாலும் அங்கு மிச்சமிருக்கும் கடைசிமனிதன் கூட எஸ்பிபி பாடலை கேட்டபடியே தன் காலத்தை கடத்துவான் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லமுடியும். பாடலின் சந்தங்களுக்கும் கிடைக்கும் சந்துகளுக்கும் இடையில் சங்கதிகளின் மூலம் ஒரு சர்க்கசையே நடத்தி முடிக்கும் வித்தை தெரிந்த எஸ்பிபி க்கு நிகரான பாடகர்கள் இங்கு யாருமே கிடையாது. அவரைப்போல வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாட்டத்துடன் வாழ்ந்தவர்களும் யாரும் இருக்க முடியாது. அவர் துன்பங்களை துக்கங்களை அவமானங்களை உடல்நலக் குறைவை ...